Saturday, December 18, 2010

Blog எழுதுவதை நிறுத்திவிட்டான் ஜாவா கணேஸ்


பல்லாயிரம் ஹிட்ஸ்களையும் பலநூறு ஓட்டுக்களையும் எனக்களித்து, என்னை பிரபல பதிவராக ஆக்கிய வலையுலக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் அந்திய கால வந்தனங்கள்.

எனது பதிவுகள், தொடர்ந்தும் திருடப்படுவதாலும், எதிர்த்து நியாயம் கேட்டால், யாரோ பிரபல பதிவர் அனானி என்பவர் தொடர்ந்தும் கெட்ட வார்த்தைகளால் பச்சை பச்சையாக திட்டிவருவதாலும், எனக்கு நாக்கை புடுங்கிக்கொண்டு நாண்டுகிட்டு சாகலாம்போல் உள்ளது.

ஆதனால் இந்த பதிவுலகம் என்ற ஜோதியில் இருந்து அணைகின்றேன்.
இருந்தபோதிலும் எனக்கு பின்னூட்டமிட்ட நல்ல உள்ளங்கள், ஓட்டுபோட்ட நண்பர்கள் ஆகியோரிடம் இருந்து கண்கள் பனிக்க, இதயம் கனக்க, நினைவுகள் இனிக்க…. என்று கனக்க எழுத நினைக்காமல், சடீர் என விடைபெற்றுக்கொள்கின்றேன்.

இதற்கு மேலும் என்னை வண்டை வண்டையாக அள்ளிக்கொட்டினால் மீண்டும் பதிவுலகிற்கு வந்து விடுவேன் என எச்சரித்து கடும் தொனியில் கூறிச்செல்கின்றேன்.

Tuesday, August 24, 2010

Blog எழுதத்தொடங்கிவிட்டான் ஜாவா கணேஷ்



இணைய உலகத்தில் இணையத்தில் தமிழ் படித்து இரசிக்கும் அனைவருக்கும் என்து பணிவன்பான வணக்கங்கள்.
இதுவரை ப்ளொக்கர்களின் வாசகனாக இருந்து வந்த நான் இன்றுமுதல் பதிவர்கள் ஜோதியில் ஐக்கியமாகின்றேன்.
இன்று பௌர்ணமி நாள் என்பதாலும், இப்படியான நாட்களில் ஸ்ரீ லங்காவில் பொழுதுபோக்குகள் இல்லை என்பதால்
வீட்டில் அடைந்து கிடப்பதாலும் இந்த வலைப்பதிவை தொடங்க ஏதுவாக அமைந்துள்ளது.

நம்மட blogகில சிரிப்புக்குத்தான் முதல் இடம் என்பதனால், எனக்கு அண்மையில் பிடித்துப்போன நகைச்சுவை நடிகர், அதுதான்க விவேக்குக்கு 7,1/2 போட்டுக்காட்டி, அறை எண் 305 இல் கடவுள்ல ஜாவா சுந்தரேசனாகவும், இ.கோ.மு.சிங்கத்தில எம்.எஸ்.பாஸ்கரின் மொழிபெயர்ப்பாளராகவும் வரும் அவரையும் அவரது ஜாவா என்ற அடைமொழியையும் எடுத்துக்கொண்டுள்ளேன். நான் அவரை விரும்ப அடுத்த காரணம் அசப்பில நான் அவர்போலவும் இருப்பதே..

வாழ்த்துங்கள், பாராட்டுங்கள்...வருவேற்றுக்கொள்ளுங்கள்...