Tuesday, August 24, 2010

Blog எழுதத்தொடங்கிவிட்டான் ஜாவா கணேஷ்



இணைய உலகத்தில் இணையத்தில் தமிழ் படித்து இரசிக்கும் அனைவருக்கும் என்து பணிவன்பான வணக்கங்கள்.
இதுவரை ப்ளொக்கர்களின் வாசகனாக இருந்து வந்த நான் இன்றுமுதல் பதிவர்கள் ஜோதியில் ஐக்கியமாகின்றேன்.
இன்று பௌர்ணமி நாள் என்பதாலும், இப்படியான நாட்களில் ஸ்ரீ லங்காவில் பொழுதுபோக்குகள் இல்லை என்பதால்
வீட்டில் அடைந்து கிடப்பதாலும் இந்த வலைப்பதிவை தொடங்க ஏதுவாக அமைந்துள்ளது.

நம்மட blogகில சிரிப்புக்குத்தான் முதல் இடம் என்பதனால், எனக்கு அண்மையில் பிடித்துப்போன நகைச்சுவை நடிகர், அதுதான்க விவேக்குக்கு 7,1/2 போட்டுக்காட்டி, அறை எண் 305 இல் கடவுள்ல ஜாவா சுந்தரேசனாகவும், இ.கோ.மு.சிங்கத்தில எம்.எஸ்.பாஸ்கரின் மொழிபெயர்ப்பாளராகவும் வரும் அவரையும் அவரது ஜாவா என்ற அடைமொழியையும் எடுத்துக்கொண்டுள்ளேன். நான் அவரை விரும்ப அடுத்த காரணம் அசப்பில நான் அவர்போலவும் இருப்பதே..

வாழ்த்துங்கள், பாராட்டுங்கள்...வருவேற்றுக்கொள்ளுங்கள்...