Saturday, December 18, 2010

Blog எழுதுவதை நிறுத்திவிட்டான் ஜாவா கணேஸ்


பல்லாயிரம் ஹிட்ஸ்களையும் பலநூறு ஓட்டுக்களையும் எனக்களித்து, என்னை பிரபல பதிவராக ஆக்கிய வலையுலக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் அந்திய கால வந்தனங்கள்.

எனது பதிவுகள், தொடர்ந்தும் திருடப்படுவதாலும், எதிர்த்து நியாயம் கேட்டால், யாரோ பிரபல பதிவர் அனானி என்பவர் தொடர்ந்தும் கெட்ட வார்த்தைகளால் பச்சை பச்சையாக திட்டிவருவதாலும், எனக்கு நாக்கை புடுங்கிக்கொண்டு நாண்டுகிட்டு சாகலாம்போல் உள்ளது.

ஆதனால் இந்த பதிவுலகம் என்ற ஜோதியில் இருந்து அணைகின்றேன்.
இருந்தபோதிலும் எனக்கு பின்னூட்டமிட்ட நல்ல உள்ளங்கள், ஓட்டுபோட்ட நண்பர்கள் ஆகியோரிடம் இருந்து கண்கள் பனிக்க, இதயம் கனக்க, நினைவுகள் இனிக்க…. என்று கனக்க எழுத நினைக்காமல், சடீர் என விடைபெற்றுக்கொள்கின்றேன்.

இதற்கு மேலும் என்னை வண்டை வண்டையாக அள்ளிக்கொட்டினால் மீண்டும் பதிவுலகிற்கு வந்து விடுவேன் என எச்சரித்து கடும் தொனியில் கூறிச்செல்கின்றேன்.